×

இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்..!!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14ம் தேதி மீன்பிடிக்க சென்ற 27 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தொடர்ந்து கடந்த 28ம் தேதியும் 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

இந்நிலையில் மொத்தம் 64 மீனவர்களையும் அவர்களது 10 விசை படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே படகு ஒன்றுக்கு 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும். நாட்டு படகு மற்றும் பைபர் படகுகளுக்கு பச்சை வர்ணம் பூச வேண்டும் என்பன உள்ளிட்ட மீன்வளத்துறை கட்டுப்பாடுகளுக்கு எதிராக தூத்துக்குடி மீனவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan Navy ,Ramanathapuram ,Rameswaram… ,
× RELATED தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்...