×

இலங்கை சிறையில் இருந்த 17 மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த 14ம் தேதி மீன் பிடிக்க சென்ற 17 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 3 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டன. இலங்கை நீதிமன்ற உத்தரவுப்படி மீனவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த மீனவர்களை, இலங்கை போலீசார் நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதிபதி, 17 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், படகுகள் மீதான விசாரணை அக்.27ம் தேதி நடைபெறும். அப்போது படகின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் ஒரு சில நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இலங்கை சிறையில் இருந்த 17 மீனவர்கள் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Tamil Nadu ,Pudukottai ,
× RELATED கள் இறக்க அனுமதி கோரி வழக்கு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு