×

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 7 தமிழர்கள் தஞ்சம் தேடி தனுஷ்கோடி வருகை

ராமநாதபுரம்: இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் கடந்த 4 வருடங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக பெரும் நெருக்கடி ஏற்பட்டு தமிழர்கள் பகுதியில் அத்தியாவசியமான உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் 295 பேர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இரண்டு கும்பத்தை சேர்ந்தவர்கள் மன்னார் பகுதியிலிருந்து நேற்று ரூ.3 லட்சம் பணம் கொடுத்து இன்று தனுஷ்கோடிக்கு வருகை தந்தனர். அவர்களிடம் விசாரிக்கையில் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் தொழில்கள் செய்ய தமிழர்கள் ஒதுக்கப்படுவதாலும், தங்கள் மகளின் மருத்துவ செலவிற்கு அதிக அளவில் பணம் கேட்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் 7 பேரையும் கடலோர காவல்துறை மீட்டு மண்டபம் முகாமில் ஒப்படைத்தனர்.

The post இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 7 தமிழர்கள் தஞ்சம் தேடி தனுஷ்கோடி வருகை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Tamils ,Dhanushkodi ,Ramanathapuram ,Dhanushkodi Arichal Point ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தல்; அனுர குமார...