×

சீறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் துவக்கம்

 

ஈரோடு, ஏப். 25: ஈரோட்டில் தமிழ்நாடு சீறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் ஈரோடு கிளை துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு எழுத்தாளர் சங்கர் தலைமை தாங்கினார். எழுத்தாளர் உதயசங்கர் மொழிப்பெயர்ப்பு புத்தகமான வானம் பதிப்பகம் வெளியிட்ட வெல்வெட் முயல் என்ற புத்தகத்தை ஈரோடு சர்மிளா வெளியிட, நூலகர் ஷீலா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், எழுத்தாளர்களின் கதைகளை சொல்லி சீறார் எழுத்தாளர்களை ஊக்குவித்தனர். இந்த சங்கத்தின் தலைவராக சங்கீதா, துணை தலைவராக எழுத்தாளர் ஷர்மிளா, செயலாளராக சரிதா, துணை செயலாளராக கலைவாணி, பொருளாளராக பாபு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து சீறார்கள் கதை சொல்லுதலும், நாடகமும், பாடலும் நடந்தது. முன்னதாக நூலகர் ஷீலா, கிளை தலைவர் சங்கீதா நன்றி கூறினார்.

The post சீறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sirar Writer Artist Association ,Erode ,Tamil Nadu Sirar Writer Artist Sangam ,Erode.… ,Sirar Writer Artist Sangam ,Dinakaran ,
× RELATED ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து