×

சில்லி பாயின்ட்…

* ஜிம்பாப்வேயில் நடக்கும் உலக கோப்பை தகுதிச்சுற்று லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. பி பிரிவில் இலங்கை அணி 82 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தையும், அயர்லாந்து அணி 138 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தையும் வீழ்த்தின. ஏ பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த ஜிம்பாப்வே (8), நெதர்லாந்து (6), வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை (8), ஸ்காட்லாந்து (6), ஓமன் (4) அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த சுற்று நாளை தொடங்குகிறது.

* இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சாளர் மொயீன் அலி நீக்கப்பட்டு வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே களமிறக்குவது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார். ‘2011ல் சச்சினுக்காக நாம் உலக கோப்பையை வென்றது போல, இம்முறை கோஹ்லிக்காக இந்தியா சாம்பியனாக வேண்டும்’ என்று சேவக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : World Cup Qualifying League ,Zimbabwe ,Dinakaran ,
× RELATED உணவுக்காக யானைகளை கொலை செய்ய ஜிம்பாப்வே அரசு திட்டம்!!