×

சுருக்குமடி வலைகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாட்டை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: சுருக்குமடி வலைகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாட்டை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இறுதி அறிக்கை கிடைத்த பிறகே நேரக் கட்டுப்பாடு தொடர்பாக முடிவெடுக்க முடியும் என நீதிமன்றம் கூறியுள்ளது. 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் காலை 8 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நேரக் கட்டுப்பாட்டை தளர்த்தக் கோரி மீனவர்கள் சார்பில் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.

The post சுருக்குமடி வலைகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாட்டை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Government of the Union ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...