×

பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

திருச்சி: பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை எனபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திட்டமிட்டபடி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறினார். வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

The post பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister of School Education ,Kamil Maze ,Trichy ,Minister of Education ,Anil Mahez ,Tamil ,Nadu ,Minister of School ,Maze ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...