×

பள்ளி மாணவி பலாத்காரம்: கட்டிட மேஸ்திரி கைது

சேலம்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி 6வது வார்டு பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். காடையாம்பட்டி 6வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (40), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 20, 18, 16 வயதுகளில் மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பப்ஸ் வாங்கி தருவதாக கூறி ரவிக்குமார் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அந்த மாணவியை காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் அருகேயுள்ள கரடு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், தீவட்டிப் பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் இந்திரா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தார்.

The post பள்ளி மாணவி பலாத்காரம்: கட்டிட மேஸ்திரி கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Kadayyambatti, Salem District ,Dinakaran ,
× RELATED சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ₹4.80 கோடி நிதி