×

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லியில் மக்கள் பீதி

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியின் புஷ்ப் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பீதி அடைந்த டெல்லி காவல்துறை அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு குழுவுடன் பள்ளிக்கு விரைந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வெடிகுண்டு மிரட்டலால் பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு செயலிழப்புக் குழு மூலமாக பள்ளியின் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இ-மெயில் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர்.

The post பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லியில் மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...