×

சேலம், திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை இம்மாத இறுதியில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: சேலம், திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை இம்மாத இறுதியில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம், திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளது. கோவை, மதுரையை தொடர்ந்து சேலம், திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் நடந்து வந்தன. சேலத்தில் 40 கி.மீ, திருச்சியில் 38 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வு நடந்து வந்தது. சத்தியக்கூறு ஆய்வறிக்கை பணி 95% முடிந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் அரசிடம் அறிக்கை அளிக்கப்பட உள்ளது

 

The post சேலம், திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை இம்மாத இறுதியில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Metro Administration ,Chennai ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்