×

கார்களில் சோதனை: தெலங்கானாவில் ரூ6.5 கோடி பறிமுதல்


திருமலை: தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐதராபாத் அப்பா சந்திப்பில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக சென்ற கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், 6 கார்களில் சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் 6 கார்களில் மொத்தம் ரூ6.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் ராஜ் கூறுகையில், ‘தெலங்கானாவில் அக்டோபர் 9ம்தேதி முதல் தற்போது வரை ரூ571 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள், மதுபானங்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

The post கார்களில் சோதனை: தெலங்கானாவில் ரூ6.5 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Dinakaran ,
× RELATED தெலங்கானாவில் காரை ரிவர்ஸ் எடுக்க...