×

ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி உட்பட 10 பேர் கைது

திருமலை: ஐதராபாத்தில் போதை பொருள் விற்பனை வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தெலங்கானா மாநில போதை பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் மற்றும் ராஜேந்திரநகர் போலீசார் இணைந்து சைபராபாத் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 5 நைஜீரியர்களை 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் விவகாரத்தில் பிரபல திரைப்பட நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி அமன் ப்ரீத் சிங் மற்றும் திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் என மேலும் 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த விவகாரத்தில் மொத்தம் 13 பேரின் சிறுநீர் மாதிரியை பரிசோதித்ததில் அவர்களுக்கு கொக்கைன் போதைப்பொருள் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 10 பேரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 199 கிராம் கொக்கைன் போதைப்பொருள், 2 பாஸ்போர்ட், 2 பைக்குகள், 10 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

The post ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி உட்பட 10 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rahul Preet Singh ,Thirumalai ,Hyderabad ,Telangana State Anti-Narcotics Special Force ,
× RELATED ‘சாப்பிட்டதும் கிக் ஏறும்’ஐதராபாத்தை கலக்கும் விஸ்கி ஐஸ்கிரீம் விற்பனை