×

சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
நிவாரணப் பணியினை மேற்கொள்வதற்காக ராஜபாளையம் நகராட்சியை சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால்மூர்த்தி சென்னைக்கு வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த ஜெயபால்மூர்த்தி குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ₹10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு உடனடியாக அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் முருகானந்தம் அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ₹1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Rajapalayam ,Dinakaran ,
× RELATED குணமடைய வாழ்த்திய முதல்வருக்கு நன்றி :ரஜினி