காரியாபட்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு

காரியாபட்டி: காரியாபட்டியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சி துறைகளின் இயக்குநர்
பார்வையிட்டு ஆய்வு செய்தார். காரியாபட்டியில் கலைஞர் நகரபுற வளர்ச்சி திட்டத்தின்கீழ், பேருந்து நிலையம் விரிவாக்கம் மற்றும் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. மேலும் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகள், வளர் மீட்பு பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் பேரூராட்சி துறைகளின் இயக்குநர் கிரன் குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், பேரூராட்சிகளின் துணை இயக்குநர் மணிகண்டன், செயற்பொறியாளர் கருப்பையா, உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் ஆவுடையப்பன், செயல் அலுவலர் முருகன், இளநிலை பொறியாளர் கணேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

The post காரியாபட்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: