×

திருப்பதி கோயிலுக்கு சென்று திரும்பியபோது கார் மீது லாரி மோதி 6 பக்தர்கள் பலி

*விஜயவாடாவை சேர்ந்தவர்கள்

திருமலை : திருப்பதி கோயிலுக்கு சென்று திரும்பியபோது கார் மீது லாரி மோதி விபத்தில் விஜயவாடாவை சேர்ந்த 6 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர். கோயிலில் தரிசனம் செய்த பிறகு நேற்று காலை ஊருக்கு காரில் புறப்பட்டனர்.

தொடர்ந்து, திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி அருகே மிட்டகண்ரிகா கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வேகமாக வந்த லாரி இவர்களது கார் மீது ேநருக்குநேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பெண்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீகாளஹஸ்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 6 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பதி கோயிலுக்கு சென்று திரும்பியபோது கார் மீது லாரி மோதி 6 பக்தர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post திருப்பதி கோயிலுக்கு சென்று திரும்பியபோது கார் மீது லாரி மோதி 6 பக்தர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Tirupati temple ,Vijayawada Tirumala ,Tirupati Temple, Vijayawada ,
× RELATED சொல்லிட்டாங்க…