சென்னை:ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர் சின்னதுரை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார். பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கைரேகைகளை பெற ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று கைரேகைகளை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
The post ரேஷன் கடைகளில் கைரேகை பதியாவிட்டாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.