×

எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காங்கேசன் கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது.

மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று(பிப்.04) அதிகாலை 2 மணியளவில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் காங்கேசன்துறை எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனர்களை கைது செய்தனர்.

மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Rameshwaram ,Sri Lankan Navy ,congesan Sea border ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படை அட்டூழியம்: கடலில்...