×

ராமதாஸ் வலியுறுத்தல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவு: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளக்கிணறு என்ற கிராமத்தில், செந்தில்குமார் என்பவரின் வீட்டிற்கு அருகில் அவருக்கு சொந்தமான நிலத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் செந்தில்குமாரையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது. எல்லா குற்றங்களுக்கும் தாய் மது தான். மது சமூகத்தை சீரழிக்கிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் முல்லை நகரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், தமது தந்தை குடித்து விட்டு வந்து தாயை தாக்குவதாகவும், அதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் காவல்நிலையத்திற்கு சென்று புகார் செய்திருக்கிறான். மதுவால் சமூகத்தில் ஏற்பட்ட சீரழிவுகளின் பட்டியல் தொடர்கிறது. எனவே, மது விலக்கே மக்களைக் காக்கும் என்பதை உணர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

The post ராமதாஸ் வலியுறுத்தல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Tamil Nadu ,Chennai ,Bamaka ,Dinakaran ,
× RELATED தனியார் நிறுவனங்களின் சுரண்டலை...