×

தமிழ்நாட்டில் 20ம் தேதி வரை மழை நீடிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வறண்ட் வானிலை நிலவி வரும் வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்றுவரை பெய்த மழையில், தமிழ்நாட்டில் 162 மிமீ பெய்துள்ளது. இது இயல்பைவிட 6% கூடுதல் மழை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. வளி மண்டல மேல் அடுக்கு மற்றும் கீழ் அடுக்கு ஆகியவற்றுக்கு இடையில் மேகக் கூட்டம் உருவானதால் இரவு முழுவதும் மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக திருவள்ளூர் அடுத்த ஜமீன்ெகாரட்டூரில் 140 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும், இந்தநிலை 20ம் தேதி வரை நீடிக்கும்.

The post தமிழ்நாட்டில் 20ம் தேதி வரை மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,Tamilnadu ,
× RELATED தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு