×

தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு !!

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் 2வது நாளாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு அதிகாலை 2.10 மணி புறப்பட வேண்டிய ஸ்ரீலிங்கன் ஏர்லைன்ஸ் விமானமும் அதிகாலை 3.10 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு நகருக்கு புறப்பட வேண்டிய விமானமும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டன.

இதே போல அதிகாலையில் சென்னையில் இருந்து கொழும்பு, அந்தமான் புறப்பட்டுச் செல்ல வேண்டிய 2 ஏர் இந்தியா விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. லண்டன், அபுதாபி, துபாயில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை வந்தன. அதிகாலையில் டெல்லி மற்றும் மதுரைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. ரன்வே பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதனிடையே சென்னை விமான நிலையத்தின் ரன்வே பகுதியை விமான போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.7 கிமீ தூரம் காரில் சென்று அதிகாரிகள் பார்வையிட்டனர்.

The post தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு !! appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Chennai ,
× RELATED சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு...