×

திருவாடானையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருவாடானை, டிச. 8: திருவாடானை எஸ்பிஐ வங்கி முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாலுகா குழு உறுப்பினர் ரத்தினம் தலைமை வகிக்க, தாலுகா செயலாளர் சேதுராமன், விவசாய சங்க மாநில துணை செயலாளர் முத்துராமன், பொறுப்பாளர் நாகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

Tags : demonstration ,Thiruvananthapuram ,
× RELATED ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்