×

பெரும்பாலான திட்டங்களில் முன்னேற்றம்!: திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு வர இருக்கும் 4 மாதங்கள் தான் சிறப்பான காலம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!

சென்னை: திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு வர இருக்கும் 4 மாதங்கள் தான் சிறப்பான காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் முத்திரைபதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் அறிவித்த திட்டங்கள், அதன் நிலை, புதிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

திட்டங்களின் சிக்கலுக்கு தீர்வு காண கூட்டம்:

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களை முத்திரை திட்டங்கள் என வகைப்படுத்தி விரைவில் முடிக்க உத்தரவிட்டுள்ளேன். 2ம் கட்டமாக மேலும் சில திட்டங்களை இணைத்து இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. பல நல்ல திட்டங்களை அறிவித்து அவற்றின் செயலாக்கத்தை அரசு கண்காணித்து வருகிறது. அரசின் முன்னெடுப்பின் மூலம் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. திட்டத்தின் வெற்றிக்கு பல துறைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

பெரும்பாலான சிறப்பு திட்டங்களில் முன்னேற்றம்:

திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செயலாக்கத்திற்கு கொண்டு வந்துள்ளதை பாராட்டுகிறேன். சிறப்பாக கவனம் செலுத்தும் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் நடைமுறைக்கு வந்து விடும் என்பதற்கு கலைஞர் உயர்சிறப்பு மருத்துவமனையே உதாரணம். திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு வர இருக்கும் 4 மாதங்கள் தான் சிறப்பான காலம். மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழைக்கு முன்பாகவே திட்டங்களை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

சில திட்டங்களில் கவனம் தேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சில திட்டங்களில் நிலவும் தொய்வு குறித்தும் ஆய்வுக்கூட்டத்தில் விவாதித்தோம். அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம். பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் சில திட்டங்கள் மீது நடவடிக்கை தேவை. சில திட்டங்களில் தொய்வு இருப்பது கண்டறியப்பட்டு விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

The post பெரும்பாலான திட்டங்களில் முன்னேற்றம்!: திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு வர இருக்கும் 4 மாதங்கள் தான் சிறப்பான காலம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!! appeared first on Dinakaran.

Tags : CM G.K. Stalin ,Chennai ,Chief Minister ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...