EDII அகமதாபாத் தொழில்முனைவோரை உருவாக்குவதில் தனக்குள்ள நெடிய அனுபவத்தினை இப்படிப்பின் பாடத்திட்டத்தினை உருவாக்குதல் மற்றும் வல்லுநர்களின் மூலம் பயிற்றுவிப்பது வழியாக பகிர்ந்தளிக்கிறது. இதற்கான வகுப்புகள் வரும் அக்டோபர் 14, 2024 அன்று தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையவழியாக (Online Mode)//oneyearcourse.editn.in/management/form/admissions/ வரவேற்கப்படுகின்றன. இந்த பாடத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000/- கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது.
21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ITI-இல் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள். இந்த பாடநெறி ஒரு தொழில்முனைவோர் சான்றிகழ் படிப்பாகும் எனவே, ஒவ்வொரு தொழில்முனைவோராக மாற முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். சிறந்த பாடத்திட்டம். நவீன நூலகங்கள். அனுபவமிக்க பயிற்றுநர்கள், நவீன தொழில்நுட்பம் கொண்ட வகுப்பறைகள் (Smartclass) இப்பயிற்சியின் சிறப்பம்சங்கள். மேலும், விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும் மற்றும் 8668101638 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
The post அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.