×

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பு:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இதில், 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 23.6.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

The post தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu District ,Collector ,Rahul Nath ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு கிராம சபை...