×

உள்ளூர், வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கம் : அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை : பொதுமக்கள் அச்சமின்றி பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்படு வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொது மக்கள் பாதுகாப்பாகவும். அச்சமின்றியும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, முழுமையாக பேருந்துகளை இயக்கிட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், இப்பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் மற்றும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு முை கிளாம்பாக்கத்திலும்.போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

09.01.2024 நண்பகல் 01.00 மணி நிலவரப்படி

எனவே பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை அணைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உள்ளூர், வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கம் : அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivasankar ,CHENNAI ,Government of Tamil Nadu ,Chief Minister of Tamil Nadu ,Bangalore ,
× RELATED ஆட்சியில் இருந்தபோது நீட்டை...