×

செங்கல்பட்டில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று‌ நடந்தது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 262 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லலிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வின், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, வேளாண்மை இணை இயக்குநர் அசோக், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : People's Grievance Day Meeting ,Chengalpattu ,Grievance Day ,Collector ,Rahul Nath ,People's Grievance Day ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் கலெக்டர்...