×

ஒரத்தநாடு அருகே சாலை ஓரத்தில் விதி மீறி வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே சாலை ஓரத்தில் விதி மீறி வைக்கப்பட்டிருந்த இரங்கல் பேனர் சரிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அம்மானிப்பட்டியை சேர்ந்த விஜயராணி என்பவரே உயிரிழந்தனர். இவர் மேட்டுப்பட்டியில் உள்ள சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவருடன் லிஃப்ட் கேட்டு வீடு திருப்பி கொண்டிருந்தார்.

மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையை கடந்த போது சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பேனர் ஒன்று இரு சக்கர வாகனம் ஒன்றில் சரிந்து விழுந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த விஜயராணி காயமடைந்தார். இந்நிலையில் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த விஜயராணி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சமீபத்தில் மரணமடைந்த தனது தந்தை படத்திறப்பு விழாவிற்காக சாலை ஓரம் பேனர் வைத்திருந்த ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தப்போதிலும் உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காததால் சாலை ஓரங்களில் அனுமதியின்றி பேனர் வைக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.



Tags : banner
× RELATED கடும் விலை வீழ்ச்சியால் சம்பங்கியை...