×

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது கட்சித்தலைவர்கள் கண்டனம்

சென்னை: ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்ததற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாமக தலைவர் அன்புமணி: தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் தடையின்றி மீன் பிடிப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கச்சதீவிற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே 2 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களை கைது செய்தும், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் கைது நடவடிக்கையால் இரு நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவு பாதிக்கும் என்று இலங்கை அரசிற்கு தெரிந்து இருந்தும் கூட அவை மெத்தன போக்கை கடைப்பிடிப்பது வருத்தம் அளிக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

The post இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது கட்சித்தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lanka Navy ,Chennai ,Sri Lankan Navy ,BAMAK ,
× RELATED இலங்கை கடற்படையினர் அட்டூழியம்...