சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்ய ஆணையிட்டுள்ளார். பானி பூரிக்கான மசாலா நீரில் பச்சை நிற நிறமி சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தநிலையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவு..!! appeared first on Dinakaran.