தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் மூன்றாக பிரிக்கப்படும்: காஷ்மீரில் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை


கதுவா: காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கதுவாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,’ பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காக பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய விலையை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கூட அறிவார்கள். இது பாகிஸ்தானை மூன்றாக பிரிக்க வழிவகுக்கும். அதைத்தவிர வேறு வழி இல்லை. இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதற்கு தயாராக உள்ளது. அவர்களுக்கு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் ’ என்றார்.

The post தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் மூன்றாக பிரிக்கப்படும்: காஷ்மீரில் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: