×

மூத்த குடிமக்கள் உறைவிடம் தொடங்கிட அனுமதி அளித்து வெளியிடப்பட்ட அரசாணையினை ரத்து செய்து புதிய அரசாணை வெளியிட உத்தரவு

சென்னை: மூத்த குடிமக்கள் உறைவிடம் தொடங்கிட அனுமதி அளித்து வெளியிடப்பட்ட அரசாணையினை ரத்து செய்து புதிய அரசாணை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. பழனி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் திருக்கோயில் மூலம் மூத்த குடிமக்கள் உறைவிடம் தொடங்கிட அனுமதி அளித்து வெளியிடப்பட்ட அரசாணையினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்வின் முன்பு வெள்ளிக்கிழமை அன்று (24.11.2023) விசாரணைக்கு வரப்பெற்றது. வழக்கு விசாரணையின் போது மேற்கண்ட அரசாணை திருக்கோயில் தக்கார் நிலையில் நிர்வகிக்கப்பட்டு வந்தபோது வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது மேற்கண்ட திருக்கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அறங்காவலர் குழு ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையினை திரும்ப பெற்றுக்கொண்டு அறங்காவலர் குழுவில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் சட்ட விதிகளை பின்பற்றி புதிய அரசாணை வெளியிட அறிவுறுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

The post மூத்த குடிமக்கள் உறைவிடம் தொடங்கிட அனுமதி அளித்து வெளியிடப்பட்ட அரசாணையினை ரத்து செய்து புதிய அரசாணை வெளியிட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில்...