×

திறந்திருக்கும் வீடுகளில் எல்லாம் நுழையும் கட்சி காங்கிரஸ் அல்ல: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தேர்தல் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மாநில செயலாளர் இல.பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், முத்தழகன், அடையார் துரை மற்றும் கவுன்சிலர் சுகன்யா, கராத்தே செல்வம் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: ஒன்றிய குழு தமிழ்நாடு அரசை பாராட்டி உள்ளது. ஆனால் பணம் கொடுப்பவர்கள் பாஜ. அவர்கள் தமிழ்நாட்டிற்கு எப்படி பணம் கொடுப்பார்கள்? தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய எண்ணம் இருந்திருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் எப்போதோ அமைந்திருக்கும். எண்ணூர் பகுதியில் கடலில் எண்ணெய் கலந்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்க வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கதவு எப்போதும் திறந்திருக்கும் என்று கூறியிருக்கிறார். திறந்திருக்கும் வீடுகளில் எல்லாம் நுழையும் கட்சி காங்கிரஸ் அல்ல.

The post திறந்திருக்கும் வீடுகளில் எல்லாம் நுழையும் கட்சி காங்கிரஸ் அல்ல: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Congress ,KS Azhagiri ,minister ,Jayakumar ,CHENNAI ,Tamil Nadu ,Tamil Nadu Congress ,
× RELATED நீட் தொடர்பான தவெக தலைவர் விஜய்...