
சென்னை: ஆன்லைன் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, அவரது மனைவி அஸ்மிதா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஷ்ணு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Forex ஆன்லைன் டிரேடிங் செய்வதாகக் கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே மனைவி அஸ்மிதா கொடுத்த புகாரில் விஷ்ணு கைதாகி சிறையில் உள்ளார். தன் பெயரை பயன்படுத்தி வர்த்தக மோசடி செய்ததாக அஸ்மிதா புகார் கொடுத்திருந்த நிலையில், அவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
The post ஆன்லைன் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, அவரது மனைவி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
