×

நர்ஸ் வீட்டில் புகுந்து கருவாட்டு குழம்புடன் சாப்பிட்டு கொள்ளை

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, செருவாவிடுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸாக இருப்பவர் ஜெயசித்ரா (36). நேற்றுமுன்தினம் இரவு தோழி வீட்டிற்கு சென்றார். நள்ளிரவில் அவரது வீட்டில் நகை, பணம், லேப்டாப், ஆன்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்த நபர்கள் மது அருந்தியதோடு கிச்சனில் இருந்த கருவாட்டு குழம்புடன் உணவை சாப்பிட்டு சென்றுள்ளனர். புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

The post நர்ஸ் வீட்டில் புகுந்து கருவாட்டு குழம்புடன் சாப்பிட்டு கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Peravoorani ,Jayasitra ,Seruvaviduthi, Peravoorani, Thanjavur district ,
× RELATED ஆனி மாதத்திலேயே புதுகையில் களைகட்ட துவங்கிய மொய்விருந்து