×

மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ்


சென்னை: சென்னை கிண்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வெளியேற்றம் தொடர்பாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் நாளைக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிய கொள்ளளவு கொண்ட மாநகராட்சி வடிகாலில் மழை நீரை வெளியேற்றக் கூடாது. மைதானத்துக்குள்ளேயே புதிய குளத்தை உருவாக்கி அங்கேயே மழை நீரை சேகரிக்க வேண்டும் என்று நோட்டீஸில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் உரிய பதில் இல்லாததால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் சேகரிப்பதற்கான ஏற்பாட்டை ரேஸ் கோர்ஸ் நிர்வாகம், வளாகத்துக்குள் செய்ய வேண்டும். பருவமழை காலத்தில் ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் இருந்து மழைநீரை சாலைகளில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

The post மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Matras Race Club ,Chennai ,Madras Race Club ,Chennai Kindi ,Dinakaran ,
× RELATED சீலை அகற்றவில்லை என்று மெட்ராஸ் ரேஸ்...