×

அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை உதவி இயக்குனர் ஆய்வு


இலுப்பூர், டிச.3: அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பேரூராட்சி உதவி இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். அன்னவாசல் பேரூராட்சியில் கடந்த நவம்பர் 30ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 4 மதிப்பிலான கொசு மருத்து அடிக்கும் இயந்திரம், சானிடைசர், பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள் எறிந்து சாம்பலானது. இந்நிலையில் நேற்று காலை புதுக்கோட்டை காவல் தடவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினார். ஆதை தொடர்ந்து வந்த திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெகதீசன் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அன்னவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Assistant Director ,fire ,office ,Annavasal Municipality ,
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்