×

அரவக்குறிச்சி அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் அடையாளம் ெதரிந்தது

அரவக்குறிச்சி, டிச.3: அரவக்குறிச்சி அருகே நெல்லிக்கோம்பை குடகனாறு பாலத்திற்கடியில் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட பெண் பிணம் அடையாளம் தெரிந்தது. சாவுக்கான காரணம் என்ன, கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அரவக்குறிச்சி அருகே பெரிய மஞ்சுவளி ஊராட்சி நெல்லிக்கோம்பையில் குடகனாறு பாலத்திற்கடியில் நேற்று முன்தினம் அழுகிய நிலையின் சுமார் 55 வயது மதிக்கத்தக்க, ஊதா நிற சேலை அணிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து, அக்கிராம நிர்வாக அலுவர் ராமலிங்கம் கொடுத்த புகாரையடுத்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த பெண் நெல்லிக்கோம்பையைச் சேர்ந்த சிட்டுப்பிள்ளை என்ற வசந்தா (52) என்பதும், 20 வருடமாக கணவரை பிரிந்து கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார் என்பதும் விசாரணையில் போலீசாருக்கு தெரிய வந்தது. உடற்கூறு ஆய்வு முடிவுக்குப் பிறகு தான் மேலும் விவரம் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Aravakurichi ,state ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...