×

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கடவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை, சாலை மறியல்

கடவூர். டிச.3: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தரகம்பட்டியில் கடவூர் ஒன்றிய விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தரகம்பட்டியில் கடவூர் ஒன்றிய விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தரகம்பட்டி கடைவீதியில் நடந்த போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். பொருளாளர் ராமமூர்த்தி, செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து முற்றுகை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 56 பேரை சிந்தாமணிபட்டி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் கைது செய்தனர் இந்த போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Communist Party ,Marxist ,peasants ,Delhi ,
× RELATED பொன்முடி அவர்களுக்கு உடனடியாக பதவி...