×

வானில் திரண்ட கருமேகங்கள் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி அனைத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், டிச.3: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட அனைத்து சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகேசன், டிஎன்ஜிஇஏ மாவட்ட தலைவர் சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் சக்திவேல் மற்றும் வெங்கடேசன், ஜான்பாட்ஷா, சாமுவேல் சுந்தரபாண்டியன் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கின்ற புதிய மின்சார திருத்தச்சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : sky ,unions ,
× RELATED இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு