×

மக்கள் மகிழ்ச்சி லாரி கவிழ்ந்த விபத்து டிஎன்பிஎல் ஒப்பந்த ஊழியர் பலி

கரூர், டிச. 3: கரூர் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள திருக்காடுதுறை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்(51). இவர், கரூர் சேலம் பைபாஸ் சாலை அய்யம்பாளையம் பிரிவு அருகே பழுதாகி நின்ற லாரியின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மற்றொரு லாரி பழுதாகி நின்ற லாரி மீது மோதியது, மோதிய வேகத்தில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியின் அருகில் நின்று கொண்டிருந்த ஜெகநாதன் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார், லாரியை ஓட்டி வந்த மற்றொரு லாரியில் மோதிய, டிரைவர் குமார் என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : contract employee ,accident ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...