×

மாயமான இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

தர்மபுரி, டிச.3: தர்மபுரி அருகே, மாயமான இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி உஷா (29). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் இறந்து விட்டார். இந்நிலையில், உஷா திருப்பூரில் வேலை பார்த்த போது, அங்கு பொம்மிடியை சேர்ந்த வடிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் பொம்மிடி வந்து குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே, கடந்த 2 நாட்களாக உஷா வீட்டில் இல்லாதது குறித்து, உறவினர்கள் அவரை அக்கம்,பக்கம் தேடினர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில், உஷா சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், விரைந்து வந்த பொம்மிடி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உஷா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Recovery ,well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...