×

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

ஆலங்குளம், டிச.3: ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பஞ்சாயத்து சிவலிங்கபும் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குணா (24). ஐடிஐ படித்து விட்டு வேலை கிடைக்காததால் தந்தையின் டீக்கடையில் உதவியாக வேலை செய்து வந்துள்ளார்.  குணாவின் வீட்டின் அருகே அவரது உறவினர் முருகேசன் என்பவர் வீடு கட்டி வருகிறார். நேற்று காலை அந்த வீட்டின் அருகே குணா சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சார வயர் மீது குணாவின் கைப்பட்டதாக தெரிகிறது. உடனே மின்சாரம் தாக்கியதில் குணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி