×

குடிநீர் இணைப்புக்கு மனு

காரைக்குடி, டிச.3: காரைக்குடி 30வது வார்டு காளவாய்பொட்டல், பாரதியார் நகர் உள்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் பகிர்மான குழாய் பதிக்காமல் இருந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் தண்ணீருக்கு மக்கள் அலையும் நிலை ஏற்பட்டது.இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் நமது உரிமைபாதுகாப்பு இயக்கம் சார்பில் நகராட்சியில் மனு அளிக்கப்பட்டு தொடர் முயற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது பகிர்மான குழாய் அமைக்கும் பணி முடிந்துள்ள நிலையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சியில் மனு அளித்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு