கமுதி, டிச.3: கமுதியில் நடைபெற்ற இறகு பந்தாட்ட போட்டியில் கமுதி நண்பர்கள் குழு முதலிடம் பெற்றது. கமுதியில்,நண்பர்கள் இறகுப்பந்தாட்ட குழு சார்பில் நடைபெற்ற, இறகு பந்து போட்டியில் கமுதி,முதுகுளத்தூர், சாயல்குடி,பரமக்குடி, கடலாடி போன்ற ஊர்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. இதில் கமுதியை சேர்ந்த வீரவேல்முருகன்-மூர்த்திஆகியோர் முதலிடம் பெற்றனர். முதுகுளத்தூரைச் சேர்ந்த செந்தில்-சிவா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், கமுதியைச் சேர்ந்த செந்தில்- விஜயகுமார்ஆகியோர் மூன்றாம் இடத்தையும், சாயல்குடியை சேர்ந்த உமையராஜ் - செல்வக்குமார் ஆகியோர் நான்காம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சுழற் கோப்பையும், ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.