×

திருச்செந்தூர் வானிலை ஆராய்ச்சியாளருக்கு மடிக்கணினி

உடன்குடி, டிச. 3:  திருச்செந்தூரைச் சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளருக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, இலவச மடிக்கணினி வழங்கினார்.திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தனியார் வானிலை ஆராய்ச்சியாளரான இவருக்கு வானிலை தொடர்பான ஆராய்ச்சி பணிகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் தேவைப்பட்டன. இதையடுத்து தண்டுபத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, இலவச மடிக்கணினி வழங்கினார்.

 அப்போது திமுக உடன்குடி ஒன்றியச் செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் இளங்கோ, மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் அஸ்ஸாப் அலி, அமிர்தா மகேந்திரன் உடனிருந்தனர்.

Tags : Thiruchendur Meteorologist ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது