×

திருப்பூரில் 55 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

திருப்பூர், டிச.3:  திருப்பூரில் மேலும், 55 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 515 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் வேகமாக குணமடைந்து வருகிறார்கள். நேற்று 87 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 14,787 பேர் குணம் அடைந்துள்ளனர்.தற்போது 518 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 60 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Tirupur ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...