×

ரயில் நிலையத்தில் பெண் குழந்தை மீட்பு

திருப்பூர், டிச.3: திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த 2 வயது பெண் குழந்தையை சைல்டு-லைன் அமைப்பினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கை ஒன்றில் நேற்று முன்தினம் சுமார் 2 வயதான பெண் குழந்தை ஒன்று படுத்த நிலையில் அழுதபடி இருந்தது. இதைபார்த்த பயணிகள், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், குழந்தையை மீட்டு காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். பின்னர், இதுகுறித்து சைல்டு-லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கதிர், குழந்தையை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை மனவளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதால் குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டு சென்றார்களா? அல்லது வேறு காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : train station ,
× RELATED இரு சக்கர வாகனத்தில் சென்றபோது...