×

விவசாயிகளுக்கு ஆதரவாக 2ம் நாளாக தபால் நிலையம் முற்றுகை

திருப்பூர், டிச.3: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் இரண்டாவது நாளாக ரயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தை நேற்று முற்றுகையிட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்  சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மின் திருத்த சட்ட மசோதாவை கைவிடக்கோரியும் ரயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ் உள்ளிட்ட 70 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

Tags : Post office ,siege ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு