நாமக்கல், டிச.2: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில், இணைய வழியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திட்ட அலுவலர் சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்து பேசினார். சேலம் அரசு மருத்துவர் சூரியபிரகாஷ், எச்ஐவி தொற்று உள்ளோருக்கு, கொரோனாவால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசினார். இணைவழியில், பல்வேறு கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பட்ட வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டு பேசினர். உதவி பேராசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தாவரவியல் துறை பேராசிரியர் சந்திரசேகரன் செய்திருந்தார்.