ராசிபுரம், டிச.2: தமிழக அரசின் அறிவிப்பின்படி, ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இன்று(2ம் தேதி) முதல் முதுநிலை அறிவியல் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்பு துவங்குகிறது. மேலும், வரும் 7ம் தேதி இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, கல்லூரி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் நேற்று கல்லூரி முதல்வர் மணிமேகலை மேற்பார்வையில், வகுப்பறைகள் அனைத்தும் சுத்தப்படுத்தும் பணியில், குறுக்குப்புரம் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து வளாகம், இருக்கைகள் என அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இன்று மாணவர்கள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.